tamilnadu

ராணிப்பேட்டை மாணவி தற்கொலை முயற்சி

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்க மாத்திரை உட் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

நீட் நுழைவுத் தேர்வு கொடுத்த மனஅழுத்தம் மற்றும் தேர்வு அச்சம் காரணமாக சனிக்கிழமையன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகள் சவுமியா, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.இந்நிலையில் ஞாயிறன்று சவுமியாவை எழுப்பியபோது தூக்க மாத்திரைகள் உட்கொண்டிருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சவுமியாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;