சென்னை, நவ. 29- ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்தும், காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள் ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மூர் மார்க்கெட் வளாகத்தில் தென்மண்டலத் தலைவர் முருகானந்தம் தலைமை யில் வெள்ளியன்று (நவ. 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய தலை வர் ஆர்.சேதுமாதவன், செயலா ளர் எம்.பூவண்ணன், ஜான்வின் சென்ட், டி.ஆர்.இ.யூ. செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், பாலச்சந்தர் (லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன்), சூர்ய பிரகாசம் (எஸ்.ஆர்.இ.எஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதுகுறித்து முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகை யில், தெற்கு ரயில்வேயில் 3,200 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் உள்ளன. இதில் 600 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. 2016ஆம் ஆண்டுக்கு பிறகு ரயில்வே தேர்வு வாரியம் புதிதாக ஆட்களை நியமனம் செய்ய வில்லை. 2018ஆம் ஆண்டு நவம் பர் 1ஆம் தேதி தேர்வு நடை பெறும் என அறிவிப்பு வெளி யிட்டார்கள். ஆனால் இன்று வரை தேர்வு நடைபெறவில்லை. இத னால் பணிச்சுமை அதிகரிக்கிறது. மன அழுத்தத்துடனே ஸ்டேஷன் மாஸ்டர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. 2010 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தி 310 கூடுதல் பணியிடங்களை பெற்றும் கூட இன்றுவரை அமல்படுத்தப்படா மல் உள்ளது. உலகம் முழுவ தும், இந்தியாவின் பிற பகுதிகளில் கூட 12 மணிநேர வேலை என்பது குறைக்கப்பட்டு வரும் சூழலில், தெற்கு ரயில்வேயில் மட்டும் 12 மணி நேர வேலை அமலில் உள்ளது. ரயில்வேக்குள் இட மாற்றம் பதிவு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரும் கூட, பணி இட மாறுதல் செய்ய முடி யாத சூழ்நிலை உள்ளது. எனவே மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய அரசும், ரயில்வே துறை யும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.