tamilnadu

img

6 மாத காலத்திற்கு ரேசன் பொருட்களை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காக்க 6 மாத காலத்திற்கு ரேசன் பொருட்களை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தியது. மதுரையில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டத் தலைவர் பி.கோபிநாத் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.