சென்னை, டிச.12- மாமல்லபுரத்தை அழகு படுத்தி நிரந்தரமாக பாது காக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடுமென உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மாமல்லபுரத்தை நிரந்தர மாக பாதுகாக்கக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்திற்கு நீதிபதி கிருபாக ரன் நவம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். கடற் கரை கோயில், ஐந்து ரதம், அர்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட வற்றில் லைட்டிங் ஷோ-விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டி டங்களை அனுமதிக்கக் கூடாது, குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும், சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கள் மீண்டும் முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண் டும் என்பன உள்ளிட்ட பரிந் துரைகளை அவர் வழங்கி யிருந்தார்.
அந்த கடிதத்தின் அடிப் படையில், தாமாக முன் வந்து பொது நல வழக்காக நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு விசாரித்தது. நீதி பதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை கள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவ ரங்களையும் புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கை யாக தாக்கல் செய்ய நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவ காசம் கேட்கப்பட்டது. அதை ஏற்று வழக்கை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி யர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர்.