சென்னை, செப்.11- உள்ளூரில் கடலில் கலக்கும் நீரை சேமிக்காமல் நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரே லுக்கு செல்வதா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்கிறேன்’ என்று வெளிநாடுகளில் இரண்டு வாரச் சுற்றுலா முடித்து, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவு டன் பேட்டியளித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடம் ஆற்றி லிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.
கர்நாடகாவில் பெய்த கனமழை காரண மாக மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் காவிரி டெல்டாவில் பல இடங்களில் கடை மடைக்குப் போய்ச் சேரவில்லை. ‘காவிரி கால்வாய் தூர்வாரும்’ திட்டத்தையும் அதி முக அரசு கைவிட்டு ‘கமிஷன்’ அடிப்ப தற்காக மட்டுமே தூர் வாருகிறோம் என்ற பெயரில் நிதி ஒதுக்கி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆங்காங்கே ‘கட்டிங்’ அடிக்க விட்டுள்ளார்கள். கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண் மைக்கும் குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் இப்படி பயனற்றுப் போய்க்கொண்டி ருக்கிறது. ஆனால் அதுபற்றியோ, கடலில் கலக்கும் காவிரி நீரை உரிய வகையில், வேளாண் மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறையுமில்லை, ஆர்வமும் இல்லை. “நானும் ஒரு விவசாயி” என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி, மண்ணைப் போட்டு மூடுவதிலேயே கவனமுடன் செயல்படுகிறார்.
நீர் மேலாண்மையில் அதிமுக அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பொதுப் பணித்துறையை தன் பொறுப்பில் வைத்தி ருக்கும் முதலமைச்சர் காட்டும் அலட்சி யத்தால் பொதுப்பணித்துறை இப்போது வரு கின்ற தண்ணீரையும் பாதுகாக்க முடியா மல் வீணடிக்கும் ‘புதுப்பணித்’ துறையாக மாற்றப்பட்டுள்ளது. குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி, ஆங்காங்கே அதிமுக வினர் ‘கமிஷன்’ அடிக்கும் பணியாக நடை பெற்று வருகிறது. அதற்கு உடன்படாத பொறி யாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்த லட்சணத்தில் ‘நீர் சிக்கனம்’ பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்து, பொதுப் பணித்துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். வீட்டையே முறைப்படுத்த வக்கற்றவர், நாட்டை முறைப்படுத்தக் கிளம்பிவிட்டார் என்று பொது வெளியில் கேலி பேசுவது எடப்பாடிக்கு எட்டவில்லை போலிருக்கிறது! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.