சென்னை, செப்.17- இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த நம்மை அர்ப்பணித்து அன்னைத் தமி ழைக் காத்திடுவோம் என்றும் மு.க.ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- செப்டம்பர் 17தான் பகுத்தறிவுப் பக லவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள். இதே நாள் தான், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் சீர்திருத்தப் பேரியக் கத்தை அண்ணா தொடங்கிய நாள். இந்த நாளில், அன்னைத் தமிழைக் காப் பதுதான் நமக்குப் பெரு மகிழ்ச்சி. அதற் கான போராட்டமே நமக்குத் திருவிழா. அத்தகைய திருவிழாவை நாம் கொண்டாடவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தி திவாஸ்’ என்கிற இந்தி நாளினையொட்டி தெரிவித்த கருத்து தான் நம்மைக் கிளர்ச்சி கொள்ள வைத்தி ருக்கிறது. “இந்தியாவின் அடையாள மாக ஒரு மொழி தான் இருக்க வேண்டும். இந்திதான் அந்த அடையாளத்தைக் கொடுக் கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருப்பது, இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கக் கூடியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்ட வணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் பேசுவோரை இரண்டாம்தர குடிமக்களாக்குவது. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தி யாவின் அடையாளத்தைத் தகர்த்து, நாட்டின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கக்கூடியது.
நாம் எந்த மொழிக்கும் எதிரான வர்கள் அல்ல. அதே நேரத்தில் எந்த மொழியும் நம் உயிருக்கும் மேலான தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கு மேயானால், அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களு மல்ல. இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக 1938-ல் முதன் முதலில் தொடங்கிய போராட்டம் அதன்பிறகு, முன்வாசல், பின்வாசல் என பல வழிகளிலும் நுழைய முயன்ற இந்தி ஆதிக்கத்தை ஓட ஓட விரட்டி னோம். 1965-ல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்கிற மத்திய அரசின் நிலைப் பாட்டை எதிர்த்து, தமிழ்நாட்டின் இளை ஞர்களும் மாணவர்களும் போர்க் கோலம் பூண்ட மாபெரும் வரலாற்றை எவராலும் மறைக்க முடியாது. ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன், ஒரே மொழி, ஒரே மதம் என்கிற ‘இந்துத்துவா’ கொள்கையின் படிப்படி யான செயல்பாடுகளின் வெளிப்பாடு தான் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து. எனவேதான், இதை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட் டான்; யாருக்கும் தாழவும் மாட்டான் என்பதை மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு உணர்த்தும் வகையில் அணி வகுப்போம். இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த நம்மை அர்ப்பணிப் போம். அன்னைத் தமிழைக் காத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.