tamilnadu

img

மேட்டூர் அணை உபரி நீர் குறித்த டெண்டரை இறுதிசெய்ய இடைக்கால தடை

சென்னை,ஜன.24- மேட்டூர் அணை உபரி நீரை, சர பங்கா பேசின் வழியாக சேலம் மாவட்ட ஏரி- குளங்களுக்கு திருப்பிவிடுவதற் கான டெண்டரை இறுதிசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.    சேலத்தை சேர்ந்த அருள்நம்பி இன்ஜீனியரிங் கன்சல்டன்ட் என்ற  நிறு வனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக பொதுப் பணித்துறை, 449 கோடியே 50லட்சம் ரூபாய் மதிப்பில் அறிவித்த இத்திட்டத் திற்கான டெண்டருக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் டெண்டர் நடை முறைகளுக்கு 30 நாட்கள் தரப்பட வேண் டும் என விதிகள் உள்ள நிலையில், 15 நாட்கள் மட்டுமே தரப்பட்டுள்ள தாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன் றம், டெண்டர் நடைமுறைகளை தொட ரலாம், ஆனால் டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டது.  வழக்கின் விசாரணை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;