tamilnadu

img

ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்

சென்னை, ஆக. 9- மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்  றால் இனி ரூ.100-க்கு பதில்  ரூ.1000 அபராதம் விதிக்கப்படு கிறது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களை குறைக்க தலைக் கவசம் ஹெல்மெட் அணி வதை மாநில அரசு கட்டாயமாக்கி யுள்ளது. அணியத் தவறினால் அபராத கட்டணம் ரூ. 100 வசூ லிக்கப்படுகிறது.  இந்த நிலையில், மக்களவை யில் வாகன சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் நிறைவேறி யுள்ளது. இதன் மூலம் போக்கு வரத்து விதி மீறல்களில் ஈடுபடு பவர்களுக்கு இப்போது இருப்ப தைவிட பல மடங்கு அபராத கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை  காவல் ஆணையர் அலுவல கத்திலிருந்து செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  அதில், புதிய மோட்டார் வாகன  சட்டத் திருத்தத்தின்படி தலைக் கவசம் அணியாதவருக்கு அப ராதம் ரூ.100-லிருந்து ரூ.1000- மாக விரைவில் உயரத்தப்படு கிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் வீட்டிலிருந்து புறப்படும் போதே  தலைக்கவசம் அணிந்து செல்லும் பழக்கத்தை கட்டாய மாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிந்தே வாகனத்தை ஓட்டு வோம் என்று உறுதியான மன மாற்றம் கொள்ள வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிப்ப திலும் தங்களின் சந்ததிகளை காப்பதிலும் காவல்துறையோடு கை கோர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.