tamilnadu

img

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை,செப்.24- வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறிய தாவது:- வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்க ளுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருவள்ளூர், காஞ்சி புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்ப டும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்ச மாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் 16 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. வலிய காற்று வீச இருப்பதால் குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கட லோரப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.