சென்னை,நவ.22- தமிழகத்தில் 3 அரசு மருத்துவ மனைக ளில் நவீன வசதிகளை ஏற்படுத்த ரூ.400 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனை, கோவை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த 3 அரசு மருத்துவ மனைகளையும் விரிவாக்கம் செய்யவும், நவீன வசதிகள் ஏற்படுத்தவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.144 கோடி, மதுரை அரசு மருத்துவமனைக்கு ரூ.131 கோடி, கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.124 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.