சென்னை,அக்.15- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க நாம் தமிழர் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் மற்றும் திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டெர் லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் 13 பேர் உயிரி ழந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்து வருகிறார். இதுவரை 13 கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் 14 ஆம் கட்ட விசாரணைக்காக சீமான் மற்றும் கீதா ஜீவனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற சீமான் மற்றும் திமுக சார்பில் போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ. கீதா ஜீவன் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு ஒரு நபர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை இருவரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.