தமிழக முதல்வர் அறிவிப்பு
சென்னை, ஏப்.14- சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும், ஊரடங்கு முழுமை யாக ஏப்.26 ஆம் தேதி (ஞாயிறு) காலை 6 மணிமுதல் ஏப் 29 ஆம்தேதி (புதன்) இரவு 9 மணிவரை அமல் படுத்தப்படும். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளி யன்று விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து வெள் ளிக்கிழமை (ஏப்.24) ஆய்வு செய் யப்பட்டது. கிராமப்புறங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதி லும், நகரப்புறங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி களில் இந்தத் நோய்த்தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்பு கள் அதிகமாக உள்ளது.
சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகள வில் இந்த நோய்த்தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் பொதுசுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதில், நகர்ப் புறங்க ளில் ஊரடங்கை மேலும் கடுமை யாக்கினால் மட்டுமே, இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடி யும் என்று தெரிவித்துள்ளனர். எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளை யும் கருத்தில் கொண்டு, தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சி களில் தற்போதுள்ள ஊரடங்கு கட் டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ், கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும், ஊரடங்கு முழுமை யாக ஏப்.26 ஆம் தேதி (ஞாயிறு) காலை 6 மணிமுதல் ஏப் 29 ஆம்தேதி (புதன்) இரவு 9 மணிவரை அமல் படுத்தப்படும். சேலம் மற்றும் திருப்பூர் மாநக ராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழு மையாக26.4.2020 ஞாயிறு காலை 6 மணிமுதல் ஏப். 28 (செவ்வாய்) இரவு 9 மணிவரை அமல்படுத்தப் படும். இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட அத்தியாவசியப் பணி கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
33 விழுக்காடு பணியாளர்கள்
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்த கங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அம ரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத் துவத்துறை சார்ந்த பணிகள். அத்தி யாவசிய பணிகளை மேற்கொள் ளும் தலைமைச் செயலகம், சுகா தாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின் சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும். இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கி களிலும் அத்தியாவசிய பணி களுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக் கப்படுவார்கள்.
அம்மா உணவகங்கள் செயல்படும்
அம்மா உணவகங்கள், தானி யங்கி பணம் வழங்கும் இயந்திரங் கள் (ஏடிஎம் மையங்கள்) வழக்கம் போல்செயல்படும். உணவகங்க ளில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங் கப்படும். முதியோர், மாற்றுத்திற னாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரி வோர் ஆகியோருக்கு அனுமதி வழங் கப்படும்.
ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற் றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும். ஏழை களுக்கு உதவிசெய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்பு கள், சம்பந்தப்பட்ட அரசு அலுவல ரின் உரிய அனுமதியுடன் இயங்க லாம்.
பிற பணிகளுக்கு முழுமையான தடை
கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதி முறைகளுக்கு உட்பட்டு செயல் படும். அதே போல் காய்கறி, பழங் கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனு மதிக்கப்படும். மேற்கண்ட நாட்க ளில் ஏற்கனவே அனுமதி வழங்கப் பட்ட பிறகடைகள் எவற்றுக்கும் அனுமதியில்லை. மேற்கண்ட பணி களைத் தவிர, பிற பணிகளுக்கு முழு மையான தடை விதிக்கப்படுகிறது.
இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பணியாளர் கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிறதனியார் நிறுவனங்கள் செயல் படாது. மேற்குறிப்பிட்ட மாநகராட்சி களைத் தவிர பிற இடங்களில் ஏற்க னவே நடைமுறையில் உள்ள கட்டுப் பாடுகள் அனுமதிகள் தொடரும்.
கிருமி நாசினி தெளிக்கப்படும்
இக்கால கட்டத்தில் நோய்த் தடுப்பு பகுதிகள் கடுமையான கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் படும். இப்பகுதிகளில் தினந்தோ றும் இருமுறை கிருமிநாசினி தெளிக் கப்படும். மாநகரத்தில் பிறபகுதி களிலும் மக்கள் நடமாட்டம் முழு மையாக கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையையாரேனும் மீறி னால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறு வோர் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும்.
ஒத்துழைப்பீர்
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர் களுக்கு எளிதாகவும், தீவிரமாக வும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால், இதை கட்டுப் படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக் கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.