tamilnadu

img

லெனின் சிலைக்கு கேரள முன்னாள் அமைச்சர் மரியாதை

திருநெல்வேலி, மார்ச் 3- நெல்லையில் உள்ள லெனின் சிலைக்கு கேரள முன்னாள் அமைச்சர் குருதாசன் மாலை அணிவித்து மரி யாதை செய்தார். கேரள மாநிலத்தில் முன்னாள் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சராக இருந்த வர் குருதாசன். இவர் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினராகவும், சிஐடியு கேரளா மாநில பொது செயலாளராக வும் பணியாற்றியவர். தற்போது 85 வய தாகும் இவருக்கு கேரளா அரசு குறைந்தபட்ச ஊதிய ஆலோசனை குழு தலைவர் பொறுப்பை வழங்கி யுள்ளது. 

இந்நிலையில் முன்னாள் அமைச் சர் குருதாசன் செவ்வாய்க்கிழமை நெல்லைக்கு வந்தார். நெல்லை வந்த அவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு அலுவலகத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் வரவேற்றார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் குருதாசன் லெனின் சிலையை சுற்றி பார்த்து மலர் தூவி மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, எம்.சுடலை ராஜ், துரை, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் வரகுணன், கு.பழனி, பி.எம். முருகன் மற்றும் மீராஷா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.