உலக வங்கி குழுமத்தின் உறுப்பினரான சர்வதேச நிதிக் கழகம் [ International Financial Corporation] (ஐ.எஃப்.சி) எண்டியா பார்ட்னர்ஸ் ஃபண்ட் II என்ற நிறுவனத்தில் 75 கோடி ரூபாய் (சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்ய உள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் எண்டியா போர்ட்ஃபோலியோ நிறுவனத்திற்கு நிதி மற்றும் முக்கிய ஆதரவை வழங்கியுள்ளது, இதன் உதவியால் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் நிலையான அளவிடுதல் கிடைக்கும் என கழகம் அறிவிக்கிறது.
எண்டியா பார்ட்னர்கள்
இது ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாகும். இதனால் உலகளவில் உயர்தர இந்திய தயாரிப்புகளை தொடங்குவதற்கு வழிவகுக்கும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் எண்டியாவின் போர்ட்ஃபோலியோ நிறுவன தொழில்நுட்பம் மற்றும் அதன் ஒன்றிய நிறுவனங்களால் சுகாதாரத் துறைகளில் இடையூறு விளைவிக்கும் மற்றும் இடையூறுகளை உருவாக்கும் வரையறுக்கும் நிறுவனங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
இது போன்ற முதலீடுகளை பார்க்கும் போது ,இந்திய நாட்டின் பொருளாதாரம் உயர்கிறது என்று ஒரு பக்கம் பார்க்கப்பட்டாலும் ,மறுபுரம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை எற்படுத்தக் கூடிய நிறுவனங்களைக் கொண்டுள்ளது..தற்போது வெளியான EIA வரைவில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை எற்படுத்தக் கூடிய பல தளர்வுகள் உள்ளதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்ட நிலையில் ,இந்திய அரசு இது போன்ற முதலீடுகளை அனுமதிப்பதால் சுற்றுச்சூழலை அழிக்க வாய்ப்புள்ளது என்பது நிதற்சனமான உண்மை.