tamilnadu

img

மேட்டூர் அணை நிரம்பியதால், 12 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை , செப். 8- 86 ஆண்டுகளில், 43 ஆவது முறை யாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் நிரம்பி யுள்ளன. 84 அடி கொள்ளளவு கொண்ட  கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 24 ஆயிரத்து 248 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 124. 80 அடி நீர் தேக்கும் அளவைக் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை யும் முழுக் கொள்ளளவை எட்டியுள் ளது. இதனால், அணைக்கு வரும் 41 ஆயிரத்து 171 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பு சற்று குறைந்துள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியிலிருந்து 70 ஆயிரம் கன அடி யாக குறைந்தது. அதிக அளவிலான நீர் வரத்தால், தொடர்ந்து 32 வது நாளாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், நான்காவது நாளாக பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிலிகுண்டுலு, ஒகேனக்கலைக் கடந்து மேட்டூர் அணைக்கு நொடிக்கு 71  ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிரு க்கிறது. இதனால், மேட்டூர் அணை தனது 86 ஆண்டு கால வரலாற்றில் 43 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையில் நீர் இருப்பு 94.75 டி.எம்.சியாக உள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு 65,000 கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டு, இரு  கரைகளையும் அணைத்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்கும்படி வரு வாய்த்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கலைமகள் வீதி, பாலக்கரை, சின்னப்ப நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங் களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள் ளனர். 13 நிவாரண முகாம்கள் தாயார் நிலையில் உள்ளன. மேலும் குமார பாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள பொது மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன்  பிடிக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சேலம், ஈரோடு, நாம க்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.