நாமக்கல் ஏப்.10- முட்டை உற்பத்தியில் 50 சதவீதம் வரை குறைந்துள்ள தால், வரும் காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் நிலை எழுந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்க ளிலிருந்து, கோழி தீவன மூலப்பொருட் கள் வருகையில் தட்டுப்பாடு நிலவியதால், முட்டை உற்பத்திக்காக கோழிக் குஞ்சுகள், பண்ணைகளில் விடப்படாமல் இருந்து வந்தது.
தற்போது, கோழி தீவனம் கிடைக்க, அரசு வழி வகை செய்துள்ளது. இருந்தாலும், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக, கோழிக் குஞ்சுகளைப் பண்ணைகளில் விடாத தால் முட்டை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை கடந்த 8 நாட்களில் மட்டும் 85 காசுகள் வரை உயர்ந்துள் ளது. தொடர் விலை உயர்வு குறித்து, செய்தியாளர்க ளிடம் பேசிய தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன், முட்டையின் விலை 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளதாகத் தெரி வித்தார்.