சென்னை,பிப்.22- தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரு மான துரைமுருகனுக்கு வெள்ளி யன்று மாலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் போரூ ரில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் சிகிczச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரு கின்றனர். டாக்டர்களின் சிகிச் சைக்கு பிறகு அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. துரைமுருகன் மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள தகவலை அறிந்ததும், தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அவரின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்ட றிந்தார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் துரைமுருகன் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.