tamilnadu

img

உள்ளாட்சி தேர்தல் குறித்த தீர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை,டிச.6- உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, உச்ச நீதிமன்றம், ஜனநாயகத்தை காத்திடும் வகை யில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்க ளிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை, முதலமைச்சரை போன்று தாமும் வரவேற்பதாக தெரிவித்தி ருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த  வேண்டும் என்றே திமுக வலியுறுத்துவதாக வும், ஆனால், தேர்தல் நிறுத்தப்பார்ப்பதாக, திமுக மீது திட்டமிட்டு பொய் பிரச்சாரம்  முன்னெடுக்கப்படுவதாகவும், மு.க.ஸ்டா லின் கூறியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்றும், அதில், ஆளும்  அதிமுக மற்றும் அதன் கூட்டணி, மாபெரும் வெற்றிபெறும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

அரசுக்கு குட்டு: கே.எஸ்.அழகிரி

சென்னை சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கார் நினைவு நாள் கடை பிடிக்கப்  பட்டது. இதையொட்டி அவரது உருவப் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உள்ளாட்சித் தேர்தல் தொடர்  பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வர வேற்கிறோம். மாநில தேர்தல் ஆணையம் குழப்பமான திறமை இல்லாத ஆணையமாக செயல்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசுக்கு குட்டாக விழுந்துள்ளது. இது தமி ழகத்துக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு” என்றார்.