tamilnadu

img

தமிழகத்தில் நடந்து வரும் தொடர் லாக்கப் மரணங்களுக்கு கண்டனம்

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.4- தமிழகத்தில் நடந்து வரும் தொடர் லாக்கப் மரணங்களுக்கு கண்டனம் தெரி வித்தும், அம்மரணங்களில் சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தருமபுரி செங் கொடிபுரத்தில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் செவ்வா யன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள்  சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரு மான பி.டில்லிபாபு தலைமை வகித் தார். மக்கள் கண்காணிப்பகம் மாவட்டச்  செயலாளர் செந்தில் ராஜா, விசிக மண்டல பொதுச்செயலாளர்  நந்தன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் கிரேசை மேரி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலை வர் சாதிக்பாஷா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மல் லையன், அர்ஜுனன் உள்ளிட்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில், சாத்தான்குளம் காவல் நிலைய சித்திரவதை, தென்காசி மாவட் டம் அணைக்கரை விவசாயி முத்து  மரணம், வேலூர் மாவட்டம் காட்பாடி  காவல் நிலைய தாய்-மகள் சித்திர வதை உள்ளிட்ட சம்பவங்களில் சமந்தப் பட்ட காவல்துறை, வனத்துறை மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.