tamilnadu

img

தோழர் முத்துலட்சுமி காலமானார்

மதுரை, மே 8- மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்ச்சேரியைச் சேர்ந்த கே.முத்து லட்சுமி, வெள்ளியன்று காலமானார்.  அவருக்கு வயது 65. இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழ ரும், தீக்கதிர் நாளிதழின் மூத்த ஊழி யருமான தோழர் கந்தசாமியின் மனைவியும், கட்சியின் மாநிலக்குழு அலுவலக ஊழியர் கே.சரவணன் மற்றும் ஜோதிபாசு ஆகியோரின் தாயாரும் ஆவார்.

சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் கே. முத்துலட்சுமி காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம் என கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள  இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள் ளார். தோழர் சரவணன் அவர்களது தாயாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வ தோடு அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.