tamilnadu

img

அனைத்துக் கட்சிகள், அமைப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துக!

தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை, மார்ச் 14- அனைத்து அரசியல் கட்சிகள், ஜன நாயக அமைப்புகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத் துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை: இன்று (சனியன்று) மாலை இசு லாமிய அமைப்புகளை தலைமை செய லாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தி ருப்பதாக ஊடகங்களில் வந்திருக்கக் கூடிய செய்திகள் பல்வேறு கேள்வி களை எழுப்புகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, மதவேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடியவை. அசாம் அனுபவம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் இதை இசுலாமிய மக்களின் பிரச்னையாக மட்டும் முன்வைத்து, இந்து முஸ்லீம் வேறுபாட்டை உருவாக்கி அரசியல் சுயலாபம் அடைவதே பாஜக அரசின் திட்டம். அதற்குத் துணை போவது போல,  இந்தியர் அனைவரையும் பதற் றத்தில் ஆழ்த்துகிற அரசியல் பிரச் சனையை இசுலாமிய சமூகத்தின் பிரச் சனையாக மட்டும் தோற்றமளிக்க வைப்பதாகவே அதிமுக அரசின் இந்நட வடிக்கை அமைந்துள்ளது. 

அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை சட்டத்திருத்ததை எதிர்த்து இஸ்லாமிய மக்கள் அமைதியாக போராடி வரும்போது அவர்களை அச்சு றுத்தும் வகையிலும், சவால் விடும் வகையிலும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்பு கள் வன்முறையைத் தூண்டும் வகை யில் பகிரங்கமாக பேசி வருகின்றன. இவர்கள் மீது சட்டப்படியான நடவ டிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. அதேசமயம் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் அழைத்து பேசுவது ஏன் எனக் கேள்வி எழுகிறது. மத்திய அரசிடமிருந்து விளக்கம் வரவில்லை, எனவே என்.பி.ஆர். கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கிறோம் என்று ஒரு முறையும், அது இப்போது தொடங்காது என்று ஒரு முறையும் வரு வாய்த்துறை அமைச்சர் மாறி மாறி கூறி யுள்ளார். அப்படியானால் மத்திய அர சிடமிருந்து விளக்கம் கிடைத்த உடன், கணக்கெடுப்பு நடைபெறும் என்று பொருளா? அதிமுக அரசு இதில் தன் நிலைபாட்டைக் குழப்பம் இல்லாமல் தெளிவுபடுத்த வேண்டும், இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு ஒத்துழைக்க முடியாது என்ற தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டுமென பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் வலி யுறுத்திய பின்னரும், அதிமுக அரசு இதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது.  

இத்தகைய தீர்மானத்தை நிறை வேற்றினால் தமிழகத்தில் போராட் டங்கள் முடிவுக்கு வருவதுடன் பொது அமைதி ஏற்படும் . இதை செய்வதற்கு மாறாக, இஸ்லாமிய அமைப்புகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவது அம்மக்களின் போராட்டங்களை தவிர்க்க வேண்டுமென வற்புறுத்துவது பிரச்சனையைத் தீர்க்க உதவாது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அனைத்து மக்களும் சம்பந்தப் பட்ட இப்பிரச்சனையில் நியாயமான முடிவு ஏற்பட அனைத்து அரசியல் கட்சி களோடும், ஜனநாயக அமைப்புகளோ டும் கலந்து பேசுவதே கடந்த கால நடை முறை என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறோம்.