tamilnadu

img

இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகள் மூடல் : முதல்வர் அறிவிப்பு

சென்னை,  மார்ச் 23 - தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க செவ்வாயன்று  (மார்ச் 24)  மாலை 6 மணி முதல் 31ந் தேதி  வரை 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறி வித்துள்ளார். சட்டப்பேரவையில் திங்க ளன்று (மார்ச் 23)  இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதில் கூறியிருப்ப தாவது:  இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால்  பாதிக்கப் பட்ட நபர்கள் உள்ள 75 மாவட்டங் களில்,  தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சில  வழிமுறைகளை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. தனிமைப் படுத்துதல் (social distancing)என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமை யான நடவடிக்கைகளை  எடுக்க வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், போக்கு வரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டம், 1897ல்  ஷரத்து 2ன்படி மாவட்ட எல்லை கள் மூடப்படும். இந்த உத்தரவு மார்ச் 24 மாலை 6 மணி முதல்  31ஆம் தேதி வரை நடைமுறை யில் இருக்கும். இந்த அறி விக்கையை தீவிரமாக அமல் படுத்த அனைத்து காவல் ஆணை யர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

கட்டுப்பாடுகள் விவரம் :

1.அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது  மற்றும் தனியார் போக்கு வரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங் களுக்கு இடையேயுமான போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

2. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன்கடை கள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக  வளாகங்களும், பணிமனை களும் இயங்காது.

3. அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவல கங்கள் செயல்படாது.  அத்தியா வசியப் பணிகளை மேற்கொள் ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை, பொது சுகாதாரம் மற்றும்  மருத்துவத் துறை, நீதிமன்றங் கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட  அனைத்து நோய்த் தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும். 

4. தனியார் நிறுவனங்கள், தகவல்  தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலு வலகப் பணியாளர்கள் வீட்டில்  இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியா வசிய பணிகளையும் மருத்து வம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறு வனங்கள் மற்றும் மருத்துவ மனைகள் தொடர்ந்து இயங்கும்.  

5. அத்தியாவசியமானப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களு டன் இயங்க அனுமதிக்கப் படுகிறது. 

6. அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப் படுகிறது. எனினும், இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது. 

7. வீடுகள் அல்லாமல், விடுதி கள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக் கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம்  மட்டும் உணவு வழங்கும்  வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப் படும்.  அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்.

சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்

வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களு க்கு நோய் அறிகுறி வருகிறதா என கண்காணித்து அரசு மருத்துவ மனைகள் அல்லது அனு மதிக்கப்பட்ட தனியார் மருத்துவ மனைகள் மூலமோ பரிசோத னைகள் மேற்கொள்ள வேண்டும். நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும்.

வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், இந்நோய் தொற்றின் கடுமையை உணர்ந்து  நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு, இந்த நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடி யாக அரசு மருத்துவமனையோ அல்லது அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவால், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடை யூறுகளை அறிந்து, அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுக்க வேண்டும்.

இத்தடைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனை க்கும் யாதொரு தடையும் இல்லை.  நோய்த் தடுப்பு நடவடிக்கை களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரி சீலித்து வருகிறது. இதற்கான ஆணைகள் தனியே வெளியிடப் படும். அரசு எடுத்து வரும் இந்த கடுமையான  நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் இவ்வாறு முதலமைச்சர் அதில் தெரிவித்துள்ளார்.