tamilnadu

img

கனமழைக்கு வாய்ப்பு; 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் பெரும்பாலான மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 45 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால், தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
 

;