tamilnadu

img

ஒப்பந்த பணிகளுக்கு அவசர டெண்டர் ஏற்பாட்டை ரத்து செய்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஏப்.29- ஒப்பந்தப் பணிகளுக்கு அவசரமாக டெண்டர் விடும் ஏற்பாட்டை தமிழக அரசு ரத்து செய்ய வேண் டும் என்றும் ஆசிரியர், அரசு ஊழியர் உரிமைகள் மீது கை வைக்கக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

உலகமே கொரோனா தாக்கத்தால் ஸ்தம்பித்து நிற்கும்போது, பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள் ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கு டெண்டர் விடும் ஏற்பாட்டை தமிழக அரசு மே மாதம் செய்ய உள் ளது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.5000 கோடிக்கு மேல், பொதுப்பணித்துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் பெறுமானமுள்ள பணிகள் இதில் உள்ளடங் கும்.

இந்தப் பணிகள் அனைத்தும் கொரோனா தாக்கத்திற்கு முன் சாதாரண காலத்தில் திட்டமி டப்பட்டவை. தற்போது மாறியுள்ள சூழலில் இந்தத் திட்டங்கள் தேவைதானா என்பதை முறை யாக அரசு பரிசீலித்ததாக தெரியவில்லை. மேலும் நிதிநிலை அறிக்கையில் இவற்றுக்கான நிதி, சில வருவாய்கள் வரும் என்கிற அனுமானத்தில் ஒதுக் கீடு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த கால கட்டத்தில் அரசுக்கான வருவாய் பல்வேறு விதங்க ளில் வராமல் போயிருக்கவோ அல்லது குறைந்தி ருக்கவோ வாய்ப்புள்ளது. எனவே, இருக்கக்கூடிய நிதியை அல்லது வாங்கப்போகும் கடனை எத்த கைய செலவினங்களுக்கு பயன்படுத்துவது என் கிற முன்னுரிமை பார்வையோடு அரசு தனது நகர்வு களை செய்திருக்க வேண்டும்.

இவற்றில் பெரும்பாலான பணிகள் உழைப்பு சார்ந்தவை அல்ல, முதலீடு சார்ந்தவை. பெரும் இயந்திரங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டி யவை. எனவே, இதில் கிடைக்கும் வேலை வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த டெண் டர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கே பலன் கிடைக்கும். அப்படியானால் அவசர அவசரமாக டெண்டர் விடும் ஏற்பாடு துவக்கப்படுவதற்கு வேறு என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்கிற ஐயப் பாடு மக்கள் மத்தியில் எழுகிறது. வழக்கமான ஊழல் முறைகேடுகளே கண்முன் வந்து நிற்கிறது.

ஆசிரியர் அரசு ஊழியர் உரிமைகள் மீது கை வைக்காதே!

ஒருபுறம், கொரோனா தடுப்பு நடவடிக்கை களுக்கு போதுமான நிதி இல்லை என்று தமிழக அரசு கூறுகிறது. அவசரமற்ற டெண்டர் பணிகளை நிறுத்தி வைத்து அந்த நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு பயன்படுத்த முடி யும். மத்திய அரசோடு வாதாடி நிவாரண நிதியையும் நிலுவைத் தொகைகளையும் பெற முடியும். ஆனால் அவற்றை விடுத்து, ஆசிரியர் அரசு ஊழி யர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் அகவிலைப்படி ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரை முடக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், அரசு ஊழியர்களின் சரண் விடுப்பு ஓராண்டுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. ஜிபிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற தும் கண்டனத்துக்குரியதும் ஆகும். அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் போராடிப் பெற்ற உரிமை கள் மீது கை வைப்பதை அனுமதிக்க முடியாது. இவற்றுக்கான அரசு ஆணைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கொரோனா பிரச்சனை வருவதற்கு முன்பா கவே இந்தியாவிலும், தமிழகத்திலும் கடும் பொரு ளாதார நெருக்கடி முன்னுக்கு வந்தது. வேலை யின்மை விண்ணைத் தொட்டது. இப்போது உள்ள சூழலில் அனைத்து பிரச்சனைகளும் கூடுதல் பரி மாணங்களோடும், அதிதீவிரத்தோடும் மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து கொண்டிருக்கின்றன. ஊரடங்கு உத்தரவை தளர்த்திய பிறகு இத்த கைய பிரச்சனைகள் இன்னும் கொத்துக்கொத் தாக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அப்போதுள்ள சூழலை எதிர்கொள்ள, இருக்கக் கூடிய நிதியையும், வாங்குகிற கடனை யும் தொலைநோக்குப் பார்வையோடு மிகக் கவன மாக கையாளுவது அவசியமாகும். எனவே உட னடியாக டெண்டர்களை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.