வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூலை 14 - கொரோனா காலம் முழுவதும் சாலை வரியை ரத்து செய்ய வேண் டும் என வலியுறுத்தி கோவையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கினால் 6 மாதங்களாக சுற்றுலா வாகன ஓட்டு நர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், தங்களின் வாழ்வா தாரத்தைக் கணக்கில் கொண்டு சாலை வரியினை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். அனைத்து ஓட்டுநர்களுக்கும் மாதம் ரூ.7ஆயிரத்து 500 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்திந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் சங்கத்தின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் வட்டார போக்கு வரத்து அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, செல்வராஜ், வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
சேலம்
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில உதவித்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலை வர் முருகன், வெங்கடாச்சலம், சாலை போக்குவரத்து சங்க பொரு ளாளர் வேலுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.