tamilnadu

img

நாமக்கல்லில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி... 

ராசிபுரம் 
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய நகரான ராசிபுரம் அருகேயுள்ள ப.மு.பாளையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகினர். 

இதில் சஞ்சய், முருகேசன் என்ற 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

;