tamilnadu

img

ஆட்டோமொபைல்: 3.5 லட்சம் பேர் வேலை இழப்பு

டாட்டா, மாருதி, ஹோண்டா, மஹிந்த்ரா கடுமையாகப் பாதிப்பு

புதுதில்லி, ஜூன் 6- கடந்த ஒன்பது மாதங்களாக ஆட்டோமொபைல் தொழிலில் ஏற் பட்டுள்ள நெருக்கடி காரணமாக சுமார் மூன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தீர்வதற்கான அடையாளங்கள் எதுவும் கண் ணுக்குத் தெரியவில்லை. நாட்டில் கார் கள் விற்பனை தொடர்ந்து மோசமா கவே இருந்து வருகின்றன. ஆட்டோ தொழிலில் ஈடுபட்டிருந்த தற்காலிகத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள னர். மாருதி தற்காலிக ஊழியர்களை வேலைநீக்கம் செய்துவிட்டது. இப் போது பல தொழிற்சாலைகளின் வேலை நாட்களும் பெரிய அளவில் குறைந்தி ருக்கின்றன. கடந்த சில மாதங்களாக டாட்டா மோட்டார்ஸ் தொடர்ந்து மூடப் பட்டிருக்கிறது.

உண்மையில், இது சென்ற மாதத்தி லிருந்து நான்காவது தடவையாக மூடி யிருக்கிறது. இந்தத் தடவை வியாழன் முதல் சனி வரை மூடியிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக, மாதத்தில் 15 நாட்களுக்கு மட்டுமே உற்பத்தி நடை பெறுகிறது. அந்த அளவிற்குத்தான் அத னிடம் ஆர்டர்கள் இருக்கின்றன. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களின் விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இவற்றின் கார ணமாக தொழிற்சாலைகளின் வேலை நாட்களும் குறைக்கப்பட்டிருக்கின்றன. தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். சரா சரியாக, 2019 ஏப்ரலுக்குப்பின்னர் மூன் றரை லட்சம் தொழிலாளர்கள் நேரடி யாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கி றார்கள்.

கார்கள் மற்றும் மோட்டார் சைக் கிள்கள் உற்பத்தி செய்திடும் தொழிற் சாலைகளில் 15 ஆயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கி றார்கள். இவற்றுடன் சார்ந்துள்ள துணைத் தொழில்பிரிவுகளில் வேலை செய்தோர் வேலையிழந்த எண்ணிக்கை யையும் சேர்த்தால் ஒரு லட்சத்திற்கும் மேல் வரும். இவர்களில் பெரும்பகுதி யினர் தற்காலிகத் தொழிலாளர்களாவர். யமஹா மோட்டார் மற்றும் அதனு டன் இணைந்து செயல்படும் பிரான்ஸ் நாட்டு நிறுவனமான வாலியோ மற்றும் சுப்ரோஸ் 1,700 தற்காலிகத் தொழிலா ளர்களை வேலைநீக்கம் செய்திருக்கின் றன. சுப்ரோஸ் நிறுவனம் 800 தொழிலா ளர்களை வேலைநீக்கம் செய்திருக்கி றது.

வீ ஜீ கௌசிகோ 500 தொழிலாளர் களை வேலை நீக்கம் செய்திருக்கிறது. யமஹா மற்றும் வாலியோ தங்கள் நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை யை ஒவ்வொன்றும் 200க்குக் குறைத்தி ருக்கின்றன. வீல்ஸ் இந்தியா தன்னுடைய தற்கா லிகத் தொழிலாளர் எண்ணிக்கையை 800 ஆகக் குறைத்திருக்கிறது. நாட்டில் ஆட்டோமொபைல் துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 7 சதவீதம் பங்களிப்பினைச் செலு த்தி வந்தது. சுமார் 3 கோடியே 50 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வந்தது. தொழிலாளர்கள் வேலையிழந்தி ருப்பது மட்டுமல்ல, இத்தொழில்பிரிவு களும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கின்றன.    

     (ந.நி.)