பியாங்யாங், ஜூலை 4- அணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சமீ பத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது. பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அமெ ரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதா கவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இரு நாட்டு தலைவர்களும் சமீபத்தில் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடைபெற்ற சில நாட்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வட மற்றும் தென் கொரியா எல்லை யில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பான்முன்ஜோம் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்- உன்னை சில தினங்களுக்கு முன்பு சந்தித் தார். இந்த சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்றது. ஆயினும் தற்போது வட கொரியா மேற்கண்டவாறு அறிக்கை வெளி யிட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி செய்வது குறித்து 2017ஆம் ஆண்டு எட்டப்பட்ட முடிவை வடகொரியா மீறியதாக, அமெரிக்கா குற்றச்சாட்டு முன் வைத்ததற்கு இதன் மூலம் பதிலளிப்ப தாக வட கொரிய தூதர் தெரிவித்தார். வடகொரியா மீது மேலும் தடை கள் விதிக்க கேட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக ஐநா உறுப்பினர் நாடு களுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில ளிக்கும் விதமாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில் உறுப்பினர் நாடுக ளில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் வட கொரிய தொழிலாளர்களை மீண்டும் அவர்களின் தாய்நாட்டிற்கே அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. “ஜனாதிபதி டிரம்ப் உச்சிமாநாட்டி ற்கு அழைப்பு விடுத்திருந்த அதேநாளில் இந்த நாடுகள் கூட்டாக எழுதிய கடித மும் வெளியாகி இருக்கும் உண்மையை கவனிக்க வேண்டும்” என வடகொரிய தூதரின் அறிக்கை கூறுகிறது. “வட கொரியாவுடன் விரோத நடவ டிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்துடன் அமெரிக்கா உள்ளது. அதுவே நிதர்ச னம்” என்றும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமெரிக்க இன்னும் பதிலளிக்கவில்லை. சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டத்தை வட கொரியா கைவிட வலி யுறுத்தி, அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த டிரம்பும் கிம்மும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.கொரிய தீப கற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், இதுகுறித்து தெளிவான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடை பெற்ற உச்சிமாநாட்டில் தெளிவான ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது.ஆனாலும் அப்படி ஏதும் நடைபெறவில்லை. அதன் பிறகு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை. ஆனால் டிரம்பும் கிம்மும் கடிதங்களை பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டிரம்ப்பும் , கிம்மும் சந்தித்துக் கொண்டனர். ஆனா லும் ஒரு புறம் அமெரிக்கா, ஐநா உறுப்பு நாடுகளுக்கு வடகொரியாவுக்கு எதிராக கடிதம் அனுப்பி விட்டு மறுபுறம் வட கொரியாவுடன் உறவு ஏற்படுத்த முனை வதாக தோற்றம் ஏற்படுத்தவே டிரம்ப் கிம்மை சந்தித்திருக்கிறார் எனத் தெரிகிறது.