tamilnadu

img

கொரோனாவுக்கு புதிய தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்துள்ளது

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு பல்வேறு நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா அதற்கான புதிய தடுப்பூசியை பதிவு செய்துள்ளது.

ரஷ்யாவில் அக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.  முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறியுள்ளதாக ஒரு ரஷ்ய ஊடகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டு கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த தடுப்பூசியானது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகளுக்கும் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சொந்த மகளுக்கு தடுப்பூசியை போட அனுமதித்துள்ளார் விளாடிமிர் புடின். மேலும், இந்த தடுப்பூசியை வாங்குவதற்கு பிலிப்பைன்ஸ் நாடு முன்வந்துள்ளது. ஆகஸ்ட் 12 பிலிப்பைன்ஸ் அதிபருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.