tamilnadu

img

14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் விபத்து

ருமேனியா நாட்டில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்த விபத்துக்குள்ளனது.

ருமேனியா நாட்டின் மிடியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு, குயின் ஹிந்த் என்ற சரக்கு கப்பல் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக் கொண்டு நேற்று புறப்பட்ட சென்றது. கான்ஸ்டாண்டா துறைமுக நகரத்துக்கு அருகில் இந்த கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், கப்பலில் பயணித்த 22 சிரிய நாட்டை சேர்ந்தவர்களையும், ஒரு லெபனான் நாட்டை சேர்ந்தவரையும், கப்பலின் அருகே நீந்திய நிலையில் இருந்த 32 ஆடுகளையும் மீட்டனர். மேலும், கடலில் மூழ்கிய ஆடுகளை காப்பாற்ற மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான ஆடுகள் கடலில் மூழ்கிவிட்டதாக நம்பப்படுகிறது. கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து தகவல் தெரியவில்லை. ஆடுகளை காப்பாற்றுவதற்கும், கப்பலை மீட்பதற்கான நடவடிக்கை முடிந்த பின் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.