tamilnadu

img

இப்போதைக்கு கிடைக்காது கொரோனா தடுப்பூசி... சமூக இடைவெளியையும் தனிமையையும் சென்னை கடைப்பிடிக்க வேண்டும்

லண்டன்:
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில், உலக சுகாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டேவிட் நபரோ கூறியதாவது:-

பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடியதடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்துஅதை அதிகளவில் உற்பத்தி செய்து, 7.8 பில்லியன் (பில்லியன் = 100கோடி) உலக மக்களுக்கு கொண்டு செல்ல மேலும் ஒரு வருடம் ஆகும்.சில கிருமிகளுக்கான பாதுகாப்பான தடுப்பூசிபல வருடங்களாகியும் உருவாக்க முடியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கொரோனா குறித்த எச்சரிக்கையை முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என உலக மக்கள் தங்கள் நாட்டு அரசையும், உலக சுகாதார நிறுவனத்தையும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மக்கள் நாம் இன்னும் விரைவாகசெயல்பட்டிருக்க முடியாதா எனக் கேட்கின்றனர். முன்பே முடிவுகளை எடுத்திருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என இப்போது நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்குகொரோனா அறிகுறியே இல்லை என அரசுதரவுகள் கூறுகின்றன. கொரோனா பரவலை தடுக்க இந்தியா எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குஉரியது. குறிப்பாக மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் தில்லி உள்ளிட்ட அடர்த்தியான மக்கள்தொகை  நகரங்களைக் கொண்ட இந்தியா, எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் சமூக இடைவெளியையும், தனிமையையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். இதைச் செய்யாவிட்டால், அதிக நெரிசலான பகுதிகளில் வைரஸ் பரவுவதைத் தடுப்பது கடினம் என்று அவர் கூறினார். வலுவான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் நபருக்கு, கொரோனா அறிகுறியே தெரியாது.ஆனால், அவரால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என நிபுணர்கள் நம்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.

‘சனோபியின்’
இதற்கிடையில் பிரெஞ்சு நிறுவனத்தால் (சனோபியின்) உருவாக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதலில் அமெரிக்கா பெறும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி  பால் ஹட்சன்  தெரிவித்துள்ளார். இதற்கு அவர் கூறும்காரணம் சனோபியின் தடுப்பூசி ஆய்விற்கு அமெரிக்கா நிதியளிப்பதில் முதலிடத்தில் உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பு நிறுவனங்களில் சனோபியின் ஒரு முக்கியமான வீரர் என வர்ணிக்கிறார் பால் ஹட்சன்.உலகளவில் 290,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற ஒரு தொற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பைத் தேடுவதற்கான முயற்சி களை முடுக்கிவிடாவிட்டால் ஐரோப்பா பின்தங்கிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

;