லண்டன், ஜூலை 2- விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் லண்ட னிலுள்ள கிளஃபாம் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கென்ய பயணியர் விமானம் ஒன்று ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்குவதற்கு சக்கரங்களை கீழே இறக்கியபோது, அந்த நபர் கீழே விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நைரோபியிலிருந்து வந்த கென்ய பயணியர் விமானத்தில் இருந்து விழுந்தவர் என்று நம்பப்படும் இந்த நபரின் சடலம், பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. கிளஃபாம் தோட்டத்தில் சூரிய ஒளி குளியலில் ஈடுபட்டிருந்த (சன் பாத்) உள்ளூர்வாசி ஒருவர் படுத்திருந்த இடத்துக்கு ஒரு மீட்டருக்கு தூரத்தில் இந்த நபர் விழுந்ததாக ஒருவர் தெரி வித்தார். சத்தம் கேட்டு மாடியில் இருந்து கீழே பார்த்தபோது, அங்கு கிடந்த இந்த சடலத்தை கண்டதாகவும், தோட்டத்தில் சுவரில் ரத்த கறை இருந்ததை பார்த்ததாகவும் பெயர் வெளி யிட விரும்பாத இந்த நபர் கூறி யுள்ளார்.இதனை கண்டு, அருகில் சூரிய ஒளியில் படுத்தி ருந்தவரும், அதிர்ச்சியடைந்த தாகவும் அவர் தெரிவித்தார். பிரேத பரிசோதனை நடத்தப் படும் என்று தெரிவித்துள்ள மெட் காவல்துறை, இந்த நபரின் இறப்பு சந்தேகத்திற்குரியதாக தோன்றவில்லை என்று தெரி வித்துள்ளது.