ரியாத்
மேற்காசிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரகாலமாக மின்னல் வேகத்தில் உள்ளது. தினமும் 1000 பேர் வீதம் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 18 ஆயிரத்து 881 பேர் சிகிச்சையில் உள்ளனர். 144 பேர் பலியாகியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக அந்நாட்டின் முக்கிய நகரான ஜித்தா, மக்கா, மதீனா, ரியாத் போன்ற நகரங்களை அதிக சேதாரத்தைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் ரமலான் நோன்பை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடைகள், மால்கள் அனைத்தும் திறக்கப்படவுள்ளன. எனினும் தேவைக்கேற்ப மட்டுமே வெளியே செல்ல முடியும். முககவசம், சமூக இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கலாம் என அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.