tamilnadu

img

ரஷ்யாவை மிரட்டும் கொரோனா... 24 மணிநேரத்தில் 3,400 பேருக்கு பாதிப்பு  

மாஸ்கோ 
உலகில் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட நாடான ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தனது 2-ஆம் கட்ட ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து இன்று வரை அங்கு கொரோனா பரவல் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

தினமும் 3000-க்கும் அதிகமானோர் அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ரஷ்யாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,348 ஆக உயர்ந்துள்ளது.34 பேர் உயிரிழந்துள்ளனர்.   

தற்போதைய நிலவரப்படி (ஏப்ரல் 16 மாலை 4 மணி) ரஷ்யாவில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,938 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 232 பேர் பலியாகியுள்ளனர். 2,304 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.     
 

;