tamilnadu

img

இத்தாலியை மிரட்டும் கொரோனா... ஒரே நாளில் 600 பேர் பலியான சோகம் 

ரோம்
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பா நாடான இத்தாலியில் பலத்த சேதாரத்தை விளைவித்துள்ளது. பலி எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் உருவான நாடான சீனாவை பின்னுக்குத்தள்ளி தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸால் பலியானோர்களின் எண்ணிக்கை 4032-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 600-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். புதிதாக 5000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இத்தாலியில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 47 ஆயிரத்து 21 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் இத்தாலி பலத்த மனித பேரழிவைச் சந்திக்கும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.  

;