tamilnadu

img

ஊரடங்கில் சிக்கி தவித்த கேரள செவிலியர்களுக்கு சிபிஎம், வாலிபர் சங்கம் உதவி

திருநெல்வேலி,மே 5- கேரளா மாநிலம் ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களைச் சார்ந்த 11 பயிற்சி செவிலியர்கள் கடந்த 40 நாட்களாக திருநெல்வேலியில் ஊரடங்கு காரணமாக சிக்கித் தவித்தனர். அவர்களு க்கு தேவையான உதவிகளை பாளையங் கோட்டை வாலிபர் சங்கத்தினரும், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் செய்து கொடுத்தனர். அவர்கள் சொந்த மாநிலம் செல்ல பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. கேரள அரசின் அனுமதி பெற்ற பின், நெல்லை மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டது.

கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன், நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆகி யோர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெற்றுத் தந்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு பயிற்சி செவிலியர்கள் வந்து நன்றி தெரிவித்து விட்டு, கேரள மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். வழியனுப்பு நிகழ்வில் கே.ஜி.பாஸ்கரன், வர குணன், கருணா, அனில், பீட்டர், மோசஸ், குமார், சிவா, வில்சன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.