அரசியலுக்கு வர மாட்டேன். பாஜகவில் நான் இணையப் போவதாக வந்த செய்தி தவறானது என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
*****************
12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
*****************
நாகலாந்து தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா கண்டறியப் பட்டதால் திங்கள்கிழமை முதல் 48 மணிநேரத்திற்கு செயலகம் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.
*****************
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் திங்களன்று பள்ளத்தாக்கில் வேன்கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர்.
*****************
கொரோனா பொதுமுடக் கத்திற்கு பிறகு கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.
*****************
தமிழகம் முழுவதும் உள்ள ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
*****************
தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு நவம்பர் 15-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் முக்கியச் சந்தைகளில் 72,000 கோடிக்கு வர்த்தகமானதாக அனைத்திந்திய வர்த்தகர்களுக் கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
*****************
இமயமலையிலுள்ள கேதார்நாத் கோவில், கடுமையான பனிப் பொழிவுக்கிடையே, திங்கள்கிழமை சாத்தப்பட்டது.
*****************
காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் கடும் பனிச்சரிவு ஏற் படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
*****************
நவம்பர் 23-ஆம் தேதி திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக்கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித் துள்ளார்.
*****************
தஞ்சாவூரில் பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர்வீட்டில் 40 சவரன் நகைகளைத் திருடிச்சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
*****************
குமரி மாவட்டத்தில் வடகிழக்குபருவமழை தீவிரமடைந்துள் ளது. 3 மணி நேரம் இடைவிடாது பலத்த மழை கொட்டியது.
*****************
காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும்மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள் ளது.
*****************
இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கார்களை இணையவழியில் விற்றுள்ளதாக இந்தியாவின் பெரியகார் தயாரிப்பாளர்களான மாருதிசுசுகி இந்தியா நிறுவனம் தெரிவித் துள்ளது.
*****************
ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டில் புதிதாக 30,548 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 88.45 லட்சத்தைக் கடந்துள்ளது.
*****************
சென்னை, மதுரை, நெல்லை, மயிலாடுதுறை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திங்களன்று பல மணி நேரம் கனமழை பெய்தது. வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.