tamilnadu

img

2024-இல் இந்து ராஷ்டிரமாக இந்தியா அறிவிக்கப்படும்!

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர், சுரேந்திரா சிங். வாயைத் திறந்தாலே இஸ்லாமிய எதிர்ப்பும், வெறுப்புமாக கொட்டித் தீர்ப்பவர். அந்த வகையில், மீண்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மத்தைக் காட்டியுள்ளார்.இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த வீடியோக்களில் ஒன்றில், “இஸ்லா மியர்கள் 50 மனைவிகளை மணமுடித்து 1050 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்” என்றும், “இது பாரம்பரியம் அல்ல, மிருகத்தனமான செயல்” என்றும் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.அதேபோல, “2024-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் துவங்கப்பட்டு 100ஆண்டுகள் நிறைவடை கின்றது; அந்த ஆண்டில் இந்தியா இந்து ராஷ்ட்ரா வாக அறிவிக்கப்படும்” என்றும் மற்றொரு வீடி யோவில் குறிப்பிட்டுள்ள சுரேந்திரா சிங், “மேற்கு வங்க மாநிலம் இலங்கைபோன்றது;  ராமரைப் போன்று தாங்கள் ஏற்கெனவே  பாதி மேற்கு வங்கத்தை சிதைத்து விட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவின்போது மீதமுள்ள மேற்கு வங்கமும் சிதைக்கப்படும்” என்றும் ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

;