tamilnadu

img

மூன்றாம் பாலினத்தவரின் முதலாவது கலைநிகழ்ச்சிகள்

திருவனந்தபுரம், நவ. 9- மூன்றாம் பாலினத்தவ ரின் வாழ்க்கை போராட்டத்து க்கு அழகூட்டுவதாக அமைந் தது நாட்டிலேயே முதலா வதாக திருவனந்தபுரத்தில் நடந்த அவர்களது கலை நிகழ்ச்சிகள். ‘நாங்கள் எங்களுக்குள்’ என்கிற கலை நிகழ்ச்சி ஒவ்வொன்றும் ஆக்கப்பூர்வமான செய்தி களை உள்ளடக்கியிருந்தன. ‘வர்ணப்பகிட்டு’ என்கிற பெயரில் சமூக நீதித்துறை இதற்கான ஏற்பாடு செய்தி ருந்தது. சாலா அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடந்த இவ்விழாவை சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே.சைலஜா துவக்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் மூன்றான் பாலி னத்தவரின் உயர்கல்விக் கான பொறுப்பை அரசே ஏற்கும் என்றார். பணம் இல்லை என்பதற்காக படிப்பு தடைபடக்கூடாது என்ப தற்கே இந்த ஏற்பாடு. ஆண், பெண் போல் மூன்றாம் பாலி னம் என்பதும் ஒரு சமூக உண்மையாகும். அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து கலைநிகழ்ச்சி கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார். விழாவுக்கு துணை மேயர் ரவிகுமார் தலைமை வகித்தார். பல்வேறு துறை களில் சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவரான ஸ்ரீக்குட்டி, ஷியாமா எஸ்.பிரபா, ஸ்ரேயா லட்சுமி உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் தலா ரூ.10 ஆயிரமும் பதக்கங்க ளும் வழங்கினார். விழாவை யொட்டி கலைப் பேரணியும் நடைபெற்றது. 14 மாவட் டங்களிலிருந்தும் 200 பிரதி நிதிகள் பங்கேற்றனர்.

திருவனந்தபுரத்தில் நடந்து வரும் மூன்றாம் பாலினத்தினரின் மாநில அளவிலான கலைநிகழ்ச்சியில் பாலக்காடு மாவட்டத்திலிருந்து பங்கேற்ற கார்த்திகாவும் குழுவினரும் கேரள பாரம்பரிய ‘திருவாதிரா’ நடனமாடினர்.