புதுச்சேரி,மார்ச் 6- புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தற்போது முயற்சி நடந்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். புதுவை மாநில புதிய காங்கிரஸ் தலைவ ராக ஏ.வி. சுப்பிரமணியன் பதவி ஏற்பு விழாவில் பேசிய நாராயணசாமி,“மத்தியில் மோடி தலைமை யிலான பாஜக அரசு தொடர்ந்து நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது. ஆளுநர் கிரண்பேடி அனைத் துக் கோப்புகளையும் திருப்பி அனுப்புவதை தவிர, வேறு எந்த வேலையையும் செய்வது இல்லை” என்றார். எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி எதிரிக்கட்சி தலைவராக செயல்படுகிறார். சட்டப்பேரவை நடை பெறும் போது வருவதில்லை. மக்கள் பிரச்சனை கள் குறித்து பேசுவதில்லை. புதுவையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக பாஜக-அதிமுக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை ரங்கசாமி ரகசிய மாக சந்தித்து வருகிறார். இதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார். இது, ஜனநாயகத்துக்கு நல்ல தல்ல. அவரது செயல்பாடுகளை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.