ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் பயிற்சியின் போது பீரங்கி வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள போக்ரான் பாலைவனத்தில் மிகப்பெரிய இராணுவ பயிற்சி பகுதி உள்ளது. இங்குள்ள மகாஜன் துப்பாக்கிச் சூடு பயிற்சி முகாமில் வழக்கமான கள துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது 90 பீரங்கியின் பீப்பாய் வெடித்ததில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். விபத்து குறித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.