tamilnadu

img

21 வயதில் நீதிபதியாகும் ஜெய்ப்பூர் இளைஞர்

ராஜஸ்தானில் 21 வயதாகிய இளம் இளைஞர் இந்திய நீதிபதியாகி உள்ளார். 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் மானரோவர் பகுதியைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங். இவர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிப்பை கடந்த ஏப்ரல் மாதம் முடித்தார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நீதித்துறை சேவைகள் தேர்வில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 23- இல் இருந்து 21-ஆக குறைத்தது. 
இந்நிலையில் 2018ம் ஆண்டு நடந்த நீதித்துறை சேவைகள் தேர்வில் நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்து முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அவர் விரைவில் நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.  இதனால் இந்தியாவின் மிக இள வயதில் நீதிபதியான இளைஞர் என்ற சிறப்பை மயங்க் பிரதாப் சிங் பெற்றுள்ளார்.