tamilnadu

img

ஜூலை 31-ல் ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டுக! ஆளுநரிடம் முதல்வர் கெலாட் புதிய பரிந்துரை

ஜெய்ப்பூர்,ஜூலை 26- ராஜஸ்தானில் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முயன்று வருகிறார். இந்நிலையில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா விடம் அசோக் கெலாட் புதிய பரிந்துரை யை வழங்கியுள்ளார்.  ராஜஸ்தானில் முதல்வர்  அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவரது ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுடன் இணைந்து சதி செய்ததாக துணை முதல்வர் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில  காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக  தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ் தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில்  சட்டமன்றத்தைக் கூட்டி  பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் முயன்று  வருகிறார். இதனால் சட்ட மன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக் கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அசோக் கெலாட்டின் கோரிக்கை க்கு ஆளுநர் இசைவு கொடுக்கவில்லை.   இந்த பரபரப்பான அரசியல் சூழலில்  ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு புதிய பரிந்துரையை அசோக் கெலாட்  கொடுத்துள்ளார்.  ஜூலை 31 ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என அசோக் கெலாட் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக விவாதிக்கவே சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.