tamilnadu

img

மாணவர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனம் ராஜஸ்தானில் காவல்துறையை கண்டித்து ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட சிபிஎம்

ஜெய்ப்பூர், செப்.17- ராஜஸ்தானில் கல்லூரி மாணவர் சங்க தேர்தலின்போது இந்திய மாணவர் சங்கத்தின் பெண் ஊழியரின் ஆடைகளை பிடித்து இழுத்து ஆண் காவலர்கள் கடுமையாக தாக்கியதைக் கண்டித்து சிபிஎம் தலைமையில் ஆட்சியர் அலுவலக முற்றுகை நடைபெற்றது. சிகார் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றகை யிடும் போராட்டம் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடை பெற்றது. காவல்துறையினரின் தாக்குதலு க்கு தலைமை வகித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பா ளர் உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், தாக்குதலில் தொடர்புள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.   சிபிஎம் மாநில செயலாளர் அம்ராராம், மாவட்டச் செயலாளர் கிஷன் பரீக், பாத்ரா சட்டமன்ற உறுப்பினர் பல்வந்த் பூனியா,  மத்தியக் குழு உறுப்பினர் வாசுதேவ் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கா னோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இரவு முழுவதும் ஆட்சியர் அலுவலக வளா கத்தை முற்றுகையிட்டனர்.

;