tamilnadu

img

85 சதவிகித கட்டணத் தள்ளுபடி அதிகாரப்பூர்வ அறிவிக்கை எங்கே? மத்திய ரயில்வே துறைக்கு மகாராஷ்டிரா அரசு கேள்வி

மும்பை:
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிச் செல்ல ரயில் கட்டணத்தில் 85 சதவிகிதம்தள்ளுபடி அளிப்பதாக ரயில்வே துறை தெரிவித்தாலும் ஏன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தில் 85 சதவிகிதத்தை ரயில்வே மானியமாக வழங்கும் மீதமுள்ள 15 சதவிகிதத்தை மாநில அரசுகள்செலுத்தினால் போதும் என பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி ஆகியோர் தெரிவித்தனர்.மத்திய அரசு வெளியிட்ட மற்றொருஅறிவிப்பிலோ, எந்த மாநிலத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறதோ அந்தமாநில அரசுதான் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இதனால் புலம்பெயர் தொழிலாளர் களுக்கான ரயில் கட்டணத்தில் 85 சதவிகிதத்தை ரயில்வே தள்ளுபடி செய்வது உண்மையா? என்பதில் குழப்பமானசூழல் நீடித்து வந்தது. ரயில்வேயும், கட்டணத்தில் 85 சதவிகிதம் தள்ளுபடிதருகிறோம் என இதுவரை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இதனைக் குறிப்பிட்டே, மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மகாராஷ்டிர அரசு சார்பில் நான் கேட்கிறேன், புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவிகிதத்தை ரயில்வே ஏற்றுக் கொள்கிறதா என்பதில் தெளிவான நிலைப்பாடு அவசியம். இதுவரை எந்தஅறிக்கையும் ரயில்வே சார்பில் இல் லையே ஏன்? எங்கள் சந்தேகத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

;