இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் சோதனைகளை மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டச் சோதனைகள் நடக்கவுள்ளதாகச் செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆ இந்தியத் தெரிவித்துள்ளது.
கொரோனாவிற்கான ஆக்ஸ்போர்டு கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டச் சோதனைகளை மும்பையில் நடைபெறுகிறது. கிங் எட்வர்ட் மெமோரியஸ் மருத்துவமனை மற்றும் பிஒய்எல் நாயர் மருத்துவமனையில் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளுக்குச் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி பரிசோதனைகளை நடத்துவதற்கு மகாராஷ்டிரா நெறிமுறைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்தச் சோதனையானது தன்னார்வலர்களாக 200 பேருக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. பிரஹன் மும்பை மாநகராட்சியால் நடப்படும் மற்றொரு வசதியாக மும்பையைச் சார்ந்த பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனை, தடுப்பூசி பரிசோதனைகளை நடத்துவதற்கான ஒப்புதலையும் பெற்றுள்ளது. மேலும், சோதனைகளின் ஒரு பகுதியாக, ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் சோதனைகள் இரண்டிலும் கொரோனா தொற்றுக்கு அற்று காணப்படும் தன்னார்வலர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். புனேயைச் சார்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆ இந்தியா (எஸ்ஐஐ) பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா (கோவிட் -19) தடுப்பூசியைத் தயாரிக்கிறது, இது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.