மும்பை:
பாஜக தலைவர் ஒருவர், பாங்க் ஆப் இந்தியா (Bank Of India) வங்கியில் 67 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து சிக்கியுள்ளார்.
பாஜக-வின் யுவ மோர்ச்சா எனப்படும் இளைஞர் அணியின் தலைவராக இருப்பவர் மோகித்கம்போஜ். ‘ஆவ்யான் ஓவர்சீஸ்பிரைவேட் லிமிடெட்’ எனும் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகபணி புரிந்து வந்தார். இந்த நிறுவனம் கைவினைப் பொருட்கள், தங்க நகைகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து துபாய்,சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்டநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இதுதவிர, ‘கேபிஜே ஹோட்டல் கோவா பிரைவேட் லிமிடெட்’ எனும் நிறுவனத்தையும் நடத்திவந்த கம்போஜ், இந்த நிறுவனங்களின் பெயரில் 2013-ஆம்ஆண்டில் ‘பாங்க் ஆப் இந்தியா’விலிருந்து ரூ. 60 கோடி கடன் பெற்றுள்ளார். 2015-ஆம் ஆண்டு வரை அந்தக் கடன்களை திருப்பிச்செலுத்தாததால் மோகித்தின் நிறுவனம் வராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. நிறுவனம் வராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னணியின், மோகித் நடத்தும் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் புரோமோட்டர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வெளியேறியுள்ளனர்.
விசாரணையில், மோகித் வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகையைத் திசைத்திருப்பி நிறுவன இயக்குநர் ஒருவரின் பெயரில் பிளாட் வாங்கியதும் தெரியவந்துள்ளது.அதைத் தொடர்ந்து, மோகித் கம்போஜ் மூலம் தங்களுக்கு ரூ.57 கோடியே 22 லட்சம் நஷ் டம் ஏற்பட்டதாக ‘பாங்க் ஆப் இந்தியா’ நிர்வாகம் சிபிஐ-க்கு புகார்அளித்தது. அதன்பேரில் கம்போஜின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய சிபிஐ, தற்போது மோகித் கம்போஜ், அபிஷேக் கபூர், நரேஷ் கபூர், சித்தாந்த் பாக்லா, இர்தேஷ் மிஸ்ரா,ஏவியன் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட், கேபிஜே ஹோட்டல்கள் ஆகியோருக்கு எதிராக மோசடி,குற்றச்சதி மற்றும் ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது.