tamilnadu

img

40 சதவிகித இந்துக்களுக்கும் எதிரானது: சிஏஏ, என்ஆர்சி... பிரகாஷ் அம்பேத்கர் பேச்சு

மும்பை:
மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசியகுடிமக்கள் பதிவேட்டால் முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி, 40 சதவிகித இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று டாக்டர் அம்பேத்கரின் பேரனும், வஞ்சித் பகுஜன் அகாதிகட்சித் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார்.குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அவுரங்காபாத்தில் நடைபெற்ற பேரணியில் பிரகாஷ் அம்பேத்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, இதனை அவர் தெரிவித்துள்ளார்.“குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி 40 சதவிகித இந்துக்களும் பாதிக்கப் படுவார்கள். நரேந்திர மோடிதலைமையிலான அரசு, நாடுமுழுவதும் தடுப்பு முகாம் களைக்கட்டி வருகிறது. இதில், நவி மும்பை பகுதியில் உள்ள தடுப்பு முகாமில்மட்டும் 1.5 லட்சம் பேரையும்,கார்கரில் உள்ள தடுப்பு முகாமில் 5 லட்சம் பேரையும் அடைக்க முடியும்.இந்த பிரச்சனைகளை மறைப்பதற்கே என்ஆர்சியை அமல்படுத்த மாட்டோம் என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால், மறுபுறம் இதுபோன்ற முகாம்களை திறந்துகொண்டே இருக்கிறது. முகாம்களுக்கான தேவை, தற்போது எங்கிருந்து வந் தது?” என்று பிரகாஷ் அம்பேத்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

;