tamilnadu

img

மருத்துவர் கபீல் கான் நள்ளிரவில் திடீர் கைது... சிஏஏ-வுக்கு எதிராக பேசினாராம்

மும்பை:
குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்காக, மருத்துவர் கபீல் கான்கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம்,கோரக்பூர் அரசு மருத்துவமனையில் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல் கான் ஆவார். ஆனால், உத்தரப்பிரதேசபாஜக அரசு, தனது தவறை மறைப்பதற்கு, டாக்டர் கபீல்கான் மீதே பழியைத் தூக்கிப் போட்டது. அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், கபீல் கான் விடுதலையானார்.

இந்நிலையில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில், டாக்டர் கபீல் கான் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினார் என்று கூறி, அவரை உத்தரப்பிரதேச போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.சட்டப்பிரிவு 153ஹ-வின் கீழ் (இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக) அலிகார் சிவில் லைன் காவல்நிலையத்தில் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதியே கபீல்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 40 நாட்கள் கழித்து,அதுவும் கபீல் கான் மும்பையில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த இடத்தில், பின்தொடர்ந்து வந்து கைது செய்துள்ளனர்.

;