tamilnadu

img

தாராவி குடிசைப் பகுதியில் கொரோனா பாதிப்பு 200-யை தாண்டியது.... 

மும்பை
நாட்டின் நிதிநிலை நகரைக் கொண்டுள்ள (மும்பை) மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. புரியும் படி சொன்னால் இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா தான்   முதலிடத்தில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அங்கு 5 ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 269 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலும் கொரோனா தனது கோரத்தாண்டவத்தைக் காண்பித்து வருகிறது. அங்குக் கடந்த 24 மணிநேரத்தில் 25 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தாராவி பகுதியில் மொத்தமாக 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

;